கல்விக் கொள்ளையர்கள் ஜூலை 31, 2007
http://blackboards.blogspot.com/2007/07/blog-post_31.html
ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் பிறக்கவிருக்கிறது. 2007-08 ஆம் வருடத்திற்கான கல்வியாண்டு தொடங்கிவிட்டது. பள்ளிகளிலும் , கல்லூரிகளிலும் வகுப்புகள் தொடங்கப்பட்டுவிட்டது. பொறியியல் படிப்புக்கான அண்ணா பல்கலைக்கழக கவுன்சிலிங் தொடங்கி நடந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் “இன்றைய கல்வி” பற்றி ஒரு பதிவு எழுதலாம் என்று முயற்சிக்கிறேன்.
கல்வி என்பது மனிதனைப் பண்படுத்துவது என்பார்கள். ஒன்றுமே தெரியாத வெற்றுக் களிமண்ணாய் பிறக்கும் மனிதனுக்கு இந்த உலகத்தையே அறிமுகப்படுத்தி அதன் தோற்றம் முதல் இன்றைக்கு வரை நிகழந்த மாற்றங்களை, அறிவியல் கண்டுபிடிப்புகளை கலை இலக்கியங்களைப் போதித்து அவனை புடம் போட்டு வார்த்து எடுப்பதோடு, இந்த சமூகத்தில் அவன் யார்? அவனது பங்கு என்ன? என்பதை அவனுக்கு உணர்த்த வேண்டிய முக்கிய கடமை கல்விக்கிருக்கிறது.
ஆனால் இன்றைய சூழ்நிலையில் நாம் கல்வியை அப்படிப் பார்ப்பதில்லை. வேலைக்கு போய்ச் சம்பாதிக்க ஒரு தகுதியாக மட்டுமே கல்வி உள்ளது. எந்தத் தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்ட முடியும் என்று கணக்கு பார்ப்பது போல , எந்தப் படிப்பில் முதலீடுபோட்டால் பையன் அதிகமாகச் சம்பாதிப்பான் என்று கணக்குப் போடுகிறார்கள் . அவர்களைச் சொல்லி குற்றமில்லை.
இன்றைக்கு எந்த பத்திரிக்கையை எடுத்தாலும் இந்த படிப்புப்படித்தால் இவ்வளவு சம்பளத்தில் வேலை, இந்தக் கல்லூரியில் படித்தால் படிப்பை முடிக்கும் முன்பே வேலை என்று பக்கத்திற்குப் பக்கம் எழுதித் தள்ளுகிறார்கள். டி.வி-யில் எல்லா சேனல்களிலும் கல்லூரிகளைப் படம்பிடித்து சுண்டி இழுக்கும் விளம்பரங்களை ஒளிபரப்புகிறார்கள். இதையெல்லாம் பார்த்து நமது பெற்றோரும் இந்தக் கல்லூரிகளின் வலையில் தங்களது பணத்துடன் போய் விழுகிறார்கள்.
இன்றைக்கு இருக்கும் நடுத்தர இளைஞர்கள் ஒவ்வொருவரும் எப்படியாவது ஒரு இஞ்சினியராக வேண்டும் என்றுதான் கனவு காண்கிறார்கள். “கனவு காணுங்கள்” என்று உற்சாகமூட்டும் முதன் குடிமகன் இருந்தபோது படித்தவர்களாயிற்றே, அவர்கள் வேறு என்ன செய்வார்கள். ஆனால் அவர்கள் கனவை நினைவாக்க அவர்களது பெற்றோர் மென்மேலும் கடன் பட வேண்டியிருப்பதை அவர்கள் உணரவில்லை. பள்ளிப்படிப்பிற்கே தங்களது சேமிப்பு முழுவதையும் கறைத்துவிட்டு , கடனாளியாக நிற்கும் நடுத்தர வர்க்கத்து பெற்றோர் கல்லூரிப் படிப்பிற்காக மகனையும் கடனாளியாக்க வேண்டியுள்ளது. நடுத்தர வர்க்கத்திற்காவது வங்கிகள் கடன் கொடுக்கின்றன. ஆனால் ஏழை எளிய மக்களுக்கு அதுவும் கிடையாது.
பொறியியல் படிப்பு படிக்கக் குறைந்தது 2 லட்சம் முதல் 8 லட்சம் வரை செலவாகிறது. 10 லட்சம் இருந்தால் யார் வேண்டுமானாலும் ஒரு டாக்டராகலாம். இப்படி லட்சங்களில்தான் இன்றைக்கு உயர்கல்வி உள்ளது. எந்தக் கல்லூரியை எடுத்துக் கொண்டாலும் அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தை விட இருமடங்கு வசூலிக்கின்றனர்.இவர்களை யாரும் தட்டிக் கேட்பதோ தண்டிப்பதோ கிடையாது.
தமிழகத்தில் மட்டும் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 4.5 லட்சம் பேர் பள்ளிப் படிப்பை முடித்து வருகின்றார்கள். இவர்களுக்கென தரமான கல்வியை வழங்க இருக்கும் அரசு கல்லூரிகள் மொத்தம் 67 (மருத்துவம், பொறியியல், கலை கல்லூரிகள் எல்லாம்) இவற்றில் வெறும் 25 ஆயிரம் பேர் மட்டுமே படிக்க இயலும். மீதமுள்ள 4.25 லட்சம் பேருக்கு கல்வி வழங்கும் பொறுப்பை அரசு தட்டிக்கழித்துவிட்டது. அதை தங்களது தலைமேல் சுமக்கப் பல கல்வித்தந்தைகள் காத்திருகின்றனர்.
தமிழகம் முழுவதும், மாவட்டம் தோறும் இந்தக் கல்வித்தந்தைகள் முளைத்து கொண்டே இருக்கின்றனர். இவர்களைச் சற்று அருகில் சென்று பார்த்தோமானால் எல்லோரும் சட்டவிரோத , தேசவிரோத கூட்டம் எனபது நன்றாகத் தெரியும்.
ஜேப்பியார், உடையார் போன்ற சாராய முதலைகள்; தம்பித்துரை, ஏ.சி.சண்முகம் போன்ற அரசியல் பெருச்சாளிகள்; விஜயகாந்த், ரஜினி போன்ற கழிசடை கதாநாயகர்கள்; மலையாளத்து அம்மா முதல் மேல் மருவத்து அம்மா வரையிலான ஆன்மிக கொள்ளையர்கள்; இன்னும் சிலைதிருடர்கள், கள்ளநோட்டு களவாணிகள், விபச்சார புரோக்கர்கள், கடத்தல் மன்னர்கள்; முன்னாள்-இந்நாள் கட்டப்பஞ்சாயத்து ரவுடிகள் என ஒரு பெரிய தேசதுரோகக் கூட்டமே கல்வித்தந்தைப் பட்டத்தைச் சூட்டிக்கொண்டு திரிகிறது. இவர்கள் அனைவரும் கருப்புப்பணத்தைப் புரட்டுவதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர்.
இவர்களை நம்பித்தான் நமது கல்வியை ஒப்படைத்துள்ளது இந்த அரசு. லாபம் தரும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்றுவிட்டு; வசூலிக்க வேண்டிய வரிப்பணத்தை பன்னாட்டு முதலாளிகளுக்கு வரிச்சலுகையாக அளித்துவிட்டு; செலவுக்கு பணமில்லையென்று சாராயம் காய்ச்சி விற்கும் கேடுகெட்ட இந்த அரசு, தன்னோடு சாராயம் காய்ச்சும் கூட்டாளியிடம் மக்களின் கல்வியை ஒப்படைத்திருப்பதில் அதிசியமில்லைதான். ஆனாலும் இவர்கள் ஏதோ கல்வியைத் தூக்கி நிறுத்திவிட்டதைப் போல காட்டிக்கொள்வதைதான் சகிக்கவில்லை.
இந்தக் கல்விக் கொள்ளையர்கள் அரசு நிர்ணயித்த கட்டணங்களை விட அதிகமாக வசூலிக்கும் போது, விதிமுறைகளை மீறி கல்லுரிகளை நடத்தும் போதும் , பாதிக்கப்படும் மாணவர்கள் தட்டிக்கேட்டால் அவர்களை ரவுடிகளைக் கொண்டு தாக்கும்போதும், இந்த அரசாங்கம் கண்டுகொள்வதே கிடையாது. ஏனென்றால் இன்றைக்கு ஆளும் வர்க்கமாய் உள்ள ஒவ்வொருவனுக்கும் ஒரு கல்லூரி இருக்கிறது. தமிழகத்தில் உள்ள எல்லாத் தனியார் கல்லூரிகளும் ஏதாவதொரு வடிவத்தில் இந்த ஆளும் வர்க்கத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இந்த கொள்ளையத் தடுப்பதற்கு பதில் அதனை வளரச் செய்கின்றனர்.
1950 ல் இந்தியா குடியரசு நாடு என அறிவிக்கப்பட்டபோது 10 வருடங்களில் 14 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் கல்வி கொடுபோம் என்று அறிவித்தார்கள். இன்றைக்கு 60 ஆண்டுகளுக்கு கிட்டே ஆகியும் இன்னமும் உலகின் எழுத்தறிவில்லாதவர்களில் 50 % பேர் இந்தியர்கள் என்று கூறுவது வெட்கக் கேடானது. இன்றைக்கு இந்தியாவில் 6-14 வயதுக்குக் கீழே உள்ள 20 கோடிக் குழந்தைகளில் கிட்டத்தட்ட 3 கோடிப்பேர் பள்ளிக்கு சென்றதில்லை. 6 1/2 கோடிப்பேர் 5-ம் வகுப்புடனும். 5 கோடிப்பேர் 7-ம் வகுப்புடனும் பள்ளியை விட்டு நின்றுவிடுகின்றனர்.
காங்கிரஸ், திமுக, அதிமுக, பா.ஜ.க, கம்யூனிஸ்டு ,பாமக, மதிமுக, தேமுதிக என மாற்றி மாற்றி யாருக்கு ஓட்டுப்போட்டாலும் இந்த நிலைமை மாறவில்லை, மாறாது. நம்மை விடச் சிறிய நாடான கியுபாவில் 10 ஆண்டுகளில் கல்லாமையை முற்றிலுமாக ஒழித்துவிட்டார்கள். நம்மால் முடியாதது அவர்களால் மட்டும் எப்படி முடிந்தது. அதற்குத் தேவை நாட்டுப்பற்றும்; மக்களின் மேல் உண்மையான அக்கறையும் கொண்ட ஒரு அரசு.
துப்பாக்கியை எடுத்துச் சென்று பாகிஸ்தானியரைச் சுடுவதை மட்டுமே நாட்டுப்பற்றாக போதிக்கும் இந்த அரசிடம் மக்களின் நலனை எதிர்பார்ப்பது முட்டாள்தனம், சொந்த லாபத்திற்காக நாட்டையே கூட்டிக் கொடுக்கும் அரசியல் வாதிகளிடம் நேர்மையை எதிர்பார்ப்பது மடத்தனம்.
அரசின் இந்தக் கல்விக் கொள்ளையை மட்டுமல்ல, இன்றைக்கு சமுதாயத்தில் இவர்கள் உருவாக்கிவரும் எல்லா பிரச்சினைக்கும் மூலகாரணமான தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பொருளாதாரக் கொள்கையினை எதிர்த்துப் போராடுவது மட்டுமே புத்திசாலித்தனம்.
Labels: இந்திய ஆட்சியாளர்கள், இன்றைய கல்வி, கல்விக் கொள்ளையர்கள்
posted by கோபா at 2:20 PM
இன்றைய ஐ.டி வேலைகள் – தகுதி April 28, 2007
இன்றைய ஐ.டி வேலைகள் - தகுதி
1990-களின் இறுதியில் கணினி சார்ந்த வேலைகளுக்கு இந்தியாவில் பெரும் வரவேற்பு இருந்தது. கல்லூரிப் படிப்பில், பி.டெக்/பி.ஈ டிகிரியில் ஐ.டி என்ற துறை (கணினியியல் தவிர்த்து) உருவாக்கப்பட்டது. இதைத்தவிர பி.சி.ஏ, எம்.சி.ஏ, பி.எஸ்சி, எம்.எஸ்சி (கணினியியல்) ஆகியவை சக்கைப்போடு போட்டன. கணினி அடிப்படை, புரோகிராமிங் ஆகியவற்றைக் கற்றுத்தர ஏகப்பட்ட தனியார் கல்வி நிலையங்கள் தோன்றின. இவை தாமாகவே சில பட்டயங்களை (Diploma) தந்தன. டேட்டாபேஸ், மல்ட்டிமீடியா, SAP என்று பலவற்றையும் பல லட்சம் ரூபாய் கொடுத்து மாணவர்கள் கற்றுக்கொண்டனர்.
2000-த்தில் டாட்காம் குமிழ் உடைந்ததும் சிறிதுகாலத்துக்கு பெற்றோர்கள், மாணவர்கள் ஐ.டியிலிருந்து விலகியே இருந்தனர். 2002-லிருந்து மெதுவாக, மீண்டும் ஐ.டி துறையில் வேலைகள், படிப்புகள் அதிகமாகிக்கொண்டே வருகின்றன.
இப்பொழுது 12-ம் வகுப்பு முடித்துவிட்டு பல மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம், எங்கு சேரலாம், மாலை நேரங்களில் கணினி தொடர்பாக என்ன கற்றுக்கொள்ளலாம் என்று யோசிக்கவேண்டிய நேரம் வந்துள்ளது. இது தொடர்பாக ஐ.டி துறையில் வேலை செய்வோர் தங்களது கருத்துகளை எழுதமுடியுமா?
ஐ.டியில் வேலை செய்யாத என்னுடைய சில குறிப்புகள் இங்கே:
1. மேசைக்கணினியில் இயங்கக்கூடிய செயலிகளை (Applications) உருவாக்க: இன்று மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் மேசைக்கணினிகள் மைக்ரோசாஃப்ட் இயங்குதளத்தைக் கொண்டிருப்பவையே. எனவே இவற்றில் வேலை செய்யக்கூடிய செயலிகளை வடிவமைக்கத் தெரிந்திருக்கவேண்டிய மொழிகள்: Visual Basic .NET, Visual C++ .NET, C, C++, C# (இவற்றுள் ஏதோ ஒன்று, அல்லது மேற்கொண்டு)
2. இணையத்தில் தளங்களை (Web Sites) உருவாக்க, சேவை வழங்கிகளை (Application Servers) உருவாக்க: மைக்ரோசாஃப்ட் அல்லது யூனிக்ஸ் (லினக்ஸ்) தொழில்நுட்பம் இரண்டையும்கொண்டு இதனைச் செய்யலாம். தேவையான மொழிகள்: HTML, Javascript, Ajax, XML, ASP .NET, Perl, PHP, Java (J2EE).
3. தரவுத்தள வடிவமைப்பு (Database Servers): இன்று இணையத்தில் உள்ள பல சேவைகளுக்கும் பின்னணியில் தரவுத்தளங்கள் உள்ளன. இவை SQL என்னும் மொழியில் இயங்கும் செயலிகள். இவற்றில் இலவசமாகக் கிடைக்கும் MySQL, PostgreSQL, விலைக்குக் கிடைக்கும் Oracle, DB2, Microsoft SQL ஆகியவை அடங்கும். இவை அனைத்துக்கும் அடிப்படை SQL மொழி என்றாலும் ஒவ்வொரு தரவுத்தளச் செயலியும் தனக்கே உரித்தான சில மாறுதல்களைக் கொண்டவை. எனவே அவற்றைத் தனியாகக் கற்கவேண்டிவரும்.
4. இணைய (வழங்கி) நிர்வாகம் (System/Network Administration): இணையச் சேவைகளை வழங்கும் கணினிகள், இணைப்புகள், கணினிகளில் உள்ள செயலிகள் ஆகியவற்றை நிர்வகிப்பது, வைரஸ், எரிதங்கள் வராமல் பாதுகாப்பது போன்ற செயல்கள். இது ஒரு கணினி மொழியைக் கற்பதைப் போன்றதல்ல. பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளவேண்டும். மைக்ரோசாஃப்ட், லினக்ஸ் போன்ற இயங்குதளங்களைப் பற்றியும் அவற்றை எப்படி கணினியில் நிர்மாணிப்பது என்றும் தெரிந்துகொள்ளவேண்டும். புதிய செயலிகளைக் ஒவ்வொரு இயங்குதளத்திலும் நிர்மாணிப்பது என்றும் அறியவேண்டும்.
5. செல்பேசி: நம் கையில் இருக்கும் செல்பேசியும் கணினியைப் போன்றதுதான். அதற்கென ஓர் இயங்குதளம் உண்டு. நோக்கியா போன்றவை சிம்பயான் (Symbian) என்ற இயங்குதளத்தைக் கொண்டுள்ளன. முக்கால்வாசி செல்பேசிகளுமே இன்று ஜாவாவில் (J2ME) உருவாக்கிய செயலிகளை இயக்கக்கூடியவையாக உள்ளன. குவால்காம், ப்ரூ (BREW) என்ற மேடையை உருவாக்கியுள்ளது. சில செல்பேசிகள் இதற்கு ஆதரவு தருகின்றன. கைக்கணினிகள் பல PalmOS என்ற இயங்குதளத்தைக் கொண்டுள்ளன. இந்தச் சூழல்களில் நிரலிகளை எழுதுவதையும் ஒருவர் கற்றுக்கொள்ளலாம்.
6. மல்ட்டிமீடியா: டைப்செட்டிங், கிராஃபிக்ஸ், அனிமேஷன், ஒலி, ஒளி. இவற்றுக்கு பல செயலிகள் உள்ளன. ஒவ்வொன்றையும் கற்றுக்கொள்ளவேண்டும். Adobe Photoshop, CorelDraw, Pagemaker, InDesign, Flash, Maya, SoundForge, மேற்கொண்டு பல இருக்கலாம்.
இதில் எந்தத் துறையாக இருந்தாலும் அடிப்படையை முதலில் நன்றாகக் கற்றுக்கொண்டு, ஒரு மொழியையோ, செயலியையோ முழுவதுமாகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள். பிறகு அத்துடன் நெருங்கிய தொடர்புகொண்ட பிறவற்றைக் கற்றுக்கொள்வது நலம்தரும்.
[மேலே ஏதேனும் பெரிய அளவில் விடுபட்டிருந்தால், எழுதுங்கள். சேர்த்துவிடுகிறேன்.]
தவ்ஹீத் அரசியல் April 24, 2007
முச்சந்தி சிரிக்கும் வகையில் பாக்கர் மீண்டும் பொதுச் செயலாளர்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
பாக்கர் பி.ஜெ. ஆகியவர்களுக்கிடையிலேயான ராஜினாமா? நாடகத்தின் பின்னணி பற்றி நாம் எதுவும் எழுதாமல் இருந்தோம். பின்னணி பற்றி முன்பே எழுதி இருந்தால் முச்சந்தி சிரிக்கும் வகையில் பாக்கர் மீண்டும் பொதுச் செயலாளர் என்ற கீழ் தர முடிவை பி.ஜெ. இவ்வளவு விரைவாக எடுத்திருக்க மாட்டார். நமது எழுத்தைக் காட்டியே பாக்கரை ஏமாற்றி இருப்பார். பாக்கரும் பி.ஜெ.யை மிரட்ட முடியாத நிலைக்கு வந்திருப்பார். பிராடு பி.ஜெ.யின் முடிவுகள் பித்தலாட்டமானது என்பதும் இவ்வளவு சீக்கிரம் அம்பலமாகி இருக்காது.
பி.ஜெ.யின் தற்போதைய டுபாக்கூர்
பாக்கர் ராஜினாமாவை ஒட்டி பி.ஜெ. வள வள கொழ கொல என ஒரு விளக்கெண்ணை விளக்கம் வெளியிட்டார். அது அப்பட்டமான பொய் பித்தலாட்டம் என அறிவுள்ளவர்கள் அனைவரும் விளங்கிக் கொண்டார்கள். எங்களுக்கு நாங்களே கட்டுப்பாடு விதித்துக் கொண்டோம். கலீல் ரசூல் விஷயத்திலும் இந்த அடிப்படையில்தான் அவர் ராஜினாமா செய்தார் என கப்ஸா அடித்தார். பி.ஜெ. அடித்தது கப்ஸா இல்லை என்றால் இதே விளக்கத்தை கலீல் ரசூல் ராஜினாமாவின் போதும் கூறி இருப்பார். இது பி.ஜெ.யின் தற்போதைய டுபாக்கூர் என்பதற்கு இன்னொன்றையும் நினைவுக்கு கொண்டு வருவோம்.
பலமான சாட்சி பலரது சாட்சி ஒய்.கே. மேன்சனுக்குத்தான் இருந்தது.
தங்களுக்கு தாங்களே விதித்துக் கொண்ட கட்டுப்பாட்டுப்படிதான் இந்த ராஜினாமா என்றால் புகழ் பெற்ற ஒய்.கே. மேன்சன் விவகாரத்தின் போதே பாக்கரின் ராஜினாமா நடந்திருக்க வேண்டும். அல்லது ராஜினாமா செய்ய வைத்திருக்க வேண்டும். சென்னையிலிருந்து கோவில்பட்டி வரை அந்நிய பெண்ணுடன் அடுத்தடுத்து இருந்து வந்தார் என்பதற்கு உள்ள சாட்சிகளைவிட பலமான சாட்சி பலரது சாட்சி ஒய்.கே. மேன்சனுக்குத்தான் இருந்தது.
காதல் கடிதம் கொடுத்த பி.ஜெ.தான் தலைவராக ஆகி இருப்பாரா?
குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாவிட்டாலும் ஜமாஅத்தின் நலன் கருதி ஆரம்பத்திலேயே எங்களுக்கு நாங்களே விதித்துக் கொண்ட கட்டுப்பாடு என்பது உண்மையானால் மாணவனிடம் ஆண் புணர்ச்சி செய்த குற்றச்சாட்டுக்கு ஆளான ஸைபுல்லாவை தலைமைப் பொறுப்பில் வைத்திருப்பார்களா? அடுத்தவன் மனைவிக்கு தர்ஜுமாவில் வைத்து காதல் கடிதம் கொடுத்த பி.ஜெ.தான் தலைவராக ஆகி இருப்பாரா?
பி.ஜெ. கூறிய காரணங்கள் பிராடானது.
கோயில்பட்டி வரை பாக்கர் கும்மாளமடித்தார் என்ற குற்றச்சாட்டு பரவிய சம காலத்தில்தான் ஆமினா என்ற அந்நிய பெண்ணுடன் த.த.ஜ. மாநில துணைத் தலைவர் ஸைபுல்லாஹ் ஹாஜா மதுரையில் தங்கினார். அதனால் அந்தப் பெண்ணின் கணவரும் தலாக் சொல்லி விட்டார். என்ற செய்தியும் பிரபலமானது. ஆனால் த.த.ஜ. மாநில துணைத் தலைவர் ஸைபுல்லாஹ் ஹாஜா ராஜினாமா செய்யவில்லை. பாக்கர் ராஜினாமாவுக்கு பி.ஜெ. கூறிய காரணங்கள் பிராடானது, பித்தலாட்டமானது ரீல் என்பதற்கு இவையே போதுமானதாகும்.
பாக்கரை கழட்டி விட பி.ஜெ. சூழ்ச்சி செய்தார்.
ஸாஜிதா புக் சென்டர் ஜக்கரிய்யாவிடம் ராயல்டி வாங்கி பிழைப்பு நடத்தியவர்தான் பி.ஜெ. தானே தனியாக புக் வியாபாரம் செய்ய ஆரம்பித்ததும் தனது புக்குகளை தானே பிரிண்ட் செய்து விற்க வேண்டும். முழு வருமானமும் தனக்கே வர வேண்டும் என்று முடிவு செய்தார். உடனே ஜக்கரிய்யாவை கழட்டி விட்டார். இதுபோல்தான் பாக்கரின் விஷயமும். பி.ஜெ.யின் மூன் கிரியேஷன் மூலம் மட்டுமே சி.டி. விற்பனைகளும் டி.வி. நிகழ்ச்சிகளும் நடத்தப்பட வேண்டும். அந்த வருமானங்கள் முழுவதும் தனக்கே வர வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். பாக்கர் தன்னோடு இருந்தால் பாக்கரின் மீடியா வேல்டு மூலம் நடைபெறும் சி.டி. விற்பனை டி.வி. நிகழ்ச்சிகளை தடுக்க முடியாது. எனவே பாக்கரை கழட்டி விட பி.ஜெ. சூழ்ச்சி செய்தார்.
அடுத்தடுத்த சீட்டில் டிக்கட் ரிசர்வ் செய்யப்பட்டது.
தஃவா சென்டர் மாணவியும் பாக்கரும் ஏதோ பஸ் ஸடாண்டுக்கு போன இடத்தில் ஒரே பஸ்ஸில் ஏறி அடுத்தடுத்து இருக்கவில்லை. பி.ஜெ.யின் திட்டப்படி ஹாமித் பக்ரிக்கு 2ஆவது திருமணம் நடந்தது அல்லவா. அது போல் பி.ஜெ.யின் திட்டப்படி ஒரு வாரத்திற்கு முன்னரே தஃவா சென்டர் மாணவிக்கும் பாக்கருக்கும் ஒரே பஸ்ஸில் கணவன் மனைவி போல் அடுத்தடுத்த சீட்டில் டிக்கட் ரிசர்வ் செய்யப்பட்டது.
பாக்கர் த.மு.மு.க.வில் சேர எண்ணி பி.ஜெ. விரித்த வலையில் பாக்கர் வீழ்ந்து விட்டார். இதை பயன்படுத்தி பாக்கரை மிரட்டிய பி.ஜெ. ராஜினாமா செய்ய வைத்தார். பி.ஜெ. போட்ட சதித் திட்டத்தில் சிக்கிய பாக்கர் த.மு.மு.க.வில் சேர எண்ணி பி.ஜெ.யால் முன்னாள் சகாக்கள் எனப்படுவோருக்கு போன் செய்தார். யாரும் பாக்கரின் போன் அழைப்பில் கிடைக்கவில்லை.
பாக்கர் த.மு.மு.க.வில் சேர முயற்சி
காரணம் அனைவரது போனும் டெல்லி பேரணி பணியால் எந்த நேரமும் பிஸியாக இருந்தது. சிலர் டெல்லிக்காக சிம் கார்டையும் மாற்றி இருந்தனர். அவர்களில் ஒருவர் மேலப்பாளையத்துக்காரர். டெல்லி நம்பர் வாங்கி இருந்த அவரின் தமிழக எண்ணுக்கு பாக்கர் போன் செய்துள்ளார். அதனால் அவரிடம் பேச முடியவில்லை. பாக்கர் த.மு.மு.க.வில் சேர முயற்சி செய்யும் இந்தச் செய்தி கசிய ஆரம்பித்தது. உடனே த.மு.மு.க.வின் தொண்டர்கள் கொதித்தெழுந்தனர். பெரும்பாலான தொண்டர்கள் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர்.
முதல் முயற்சியாக துபை சென்றார்.
மாநில நிர்வாகிகளிடம் பாக்கர் மன்னிப்பு கேட்க வேண்டும். மாநில செயற்குழுவில் பாக்கர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை இல்லை. மாநில பொதுக்குழுவில்தான் மன்னிப்பு கேட்க வேண்டும் அதன் பின்தான் சேர்ப்பது பற்றி யோசிக்கவே வேண்டும் என பேச ஆரம்பித்து விட்டனர். இதை அறிந்த பாக்கர் பி.ஜெ.யை மிரட்ட முடிவு செய்து வெகுண்டெழுந்து முதல் முயற்சியாக துபை சென்றார்.
விண் டி.வியில் பி.ஜெ. செய்த மோசடி, ஊழல், கள்ளக் கணக்கு.
துபை செல்லும் முன் த.த.ஜ.வின் முன்னாள் மாநில செயலாளர்களில் ஒருவரான வழித் தோழர் என்ற பொருள்படும் பாளையவாசியிடம் பேசி உள்ளார். டேய் நீ ஏண்டா போனே. வாயை திறந்தால் நாறும்டா. அவ்வளவு அசிங்கம்டா. துபை சென்று வந்து பேசுகிறேன் என்று கூறி இருக்கிறார். அடுத்து அல்லாஹ்வின் அருள் என்ற பொருள்படும் பெயருடைய நல்லூராரிடம் பேசிய பாக்கர். துபை சென்று விண் டி.வியில் பி.ஜெ. செய்த மோசடி, ஊழல், கள்ளக் கணக்கு ஆகியவற்றை சேர் (பங்கு) சேர்ந்தவர்களிடம் விளக்கி விட்டு வரப் போகிறேன் என்று கூறி இருக்கிறார்.
அங்கிருந்தபடியே பி.ஜெ.யை மிரட்டினார்.
பி.ஜெ.யின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்ற திட்டமிட்டு துபை சென்ற பாக்கர் அப்பா கடை பார்ட்னர்களான ஜே.டி. மர்கஸ் நிர்வாகிகளை தனது ஆதரவாளர்களாக ஆக்கிக் கொண்டார். பிறகு விண் டி.வி.க்கு சேர் (பங்கு) கொடுத்து ஏமாந்தவர்களின் ஆதரவைப் பெறும் முயற்சியை செய்து கொண்டு அங்கிருந்தபடியே பி.ஜெ.யை மிரட்டினார். ஜே.டி. மர்கஸ் நிர்வாகிகள் பாக்கர் ஆதவாளர்களாக மாறியதை அறிந்த பி.ஜெ. தொடர்ந்து பாக்கர் துபையில் இருந்தால் யு.ஏ.இ. முழுக்க வென்றெடுத்து விடுவார் என்பதை உணர்ந்தார்.
பாக்கரிடம் பி.ஜெ. வீழ்ந்தார்.
யு.ஏ.இ.யை வென்றெடுத்து விட்டால் அப்படியே கத்தார், குவைத் என சென்று பி.ஜெ.யின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றி விடுவார் பாக்கர். பி.ஜெ.யின் சுக போக வாழ்வுக்கு வாரி வழங்கிக் கொண்டிருக்கும் அரபக வருமானத்தில் மண் விழுந்து விடும் என்பதையும் உணர்ந்தார். எனவே தாயகம் வாருங்கள் பேசிக் கொள்வோம் என பாக்கரிடம் பி.ஜெ. வீழ்ந்தார்.
பி.ஜெ.யின் தலைவர் பதவிக்கு ஆபத்து
துபை சென்றதால் புதிய தெம்மை பெற்ற பாக்கர் தாயகம் வந்ததும் மீண்டும் பொதுச் செயலாளர் பதவி தனக்குத் தர வேண்டும். இல்லை என்றால் மானம் காற்றில் பறக்கும். உங்கள் அந்தரங்களை அரங்கத்தில் ஏற்றி நாறடித்து விடுவேன் என்று பி.ஜெ.யை மிரட்டினார். நிர்ப்பந்தத்தால் பி.ஜெ.யிடம் அடிமை போல் கிடக்கும் த.த.ஜ. மாநில நிர்வாகிகளும் பாக்கர் பின் அணி வகுத்தனர். இதனால் நிர்வாகிகள் மட்டத்திலும் பாக்கரின் கை ஓங்கியது. கருப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு மேடையில் பேசும்போது பி.ஜெ. பெண்கள் பக்கமே அதிகம் பார்க்கிறார் என்ற குற்றச்சாட்டு மூலம் பி.ஜெ.யின் தலைவர் பதவிக்கு ஆபத்து என்ற நிலை உருவானது.
செயற்குழுவிலிருந்து வெளி நடப்பு.
பாக்கரின் மிரட்டலுக்கு அடி பணிந்தார் பி.ஜெ. அடி பணிந்த பி.ஜெ. பாக்கரை மீண்டும் பொதுச் செயலாளர் ஆக்கும் நிர்ப்பந்தத்துக்குள்ளானார். எனவே பி.ஜெ.யே பாக்கருக்காக கேன்வாஸ் செய்யும் பணியில் ஈடு பட்டார். மீண்டும் பாக்கர் பொதுச் செயலாளராக ஆக்கப்படுவதை எதிர்த்த கலீல் ரசூலும் அவரது ஆதரவாளர்களும் செயற்குழுவிலிருந்து வெளி நடப்பு செய்தனர். பி.ஜெ. முயற்சியால் மீண்டும் பாக்கர் பொதுச் செயலாளராக ஆனார். பி.ஜெ. தனது சுய நலத்துக்கா மார்க்கப் பணியை பின் தள்ளி விட்டு அரசியல் பண்ணுகிறார் என்பதை உணர்ந்த உண்மை தவ்ஹீதுவாதிகள் பி.ஜெ.யிடமிருந்து விடை பெற்று வருகின்றனர்.
நன்றி : கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
இஸ்லாத்தின் பெயரால் வயிறு வளர்க்கின்றனர் என சகட்டு மேனிக்கு அனைவரையும் குற்றம் சுமத்தியவர்கள்,
தாங்கள் மட்டுமே வடிகட்டிய தவ்ஹீதுவாதிகள் என தம்பட்டம் அடித்தவர்கள்,
தூய்மையை நிரூபிப்பதற்காக எவரையும் துச்சமென எண்ணி தூக்கி வீசக்கூடிய தன்மை உள்ளவர்களென தெருவெல்லாம் வெற்று கூச்சலிட்டவர்கள்,
இவர்கள் யாரெனப் புரியவில்லையா?
அந்தோ பரிதாபம்! இவர்கள் தான் தவ்ஹீதின் பெயரால் தகிடுதத்தங்கள் புரிந்து வரும் தமிழ்நாடு தறுதலை ஜமாஅத்தினர்.
இவர்களின் தலைமை சமீபத்தில் அடித்த கூத்து அரசியல்வாதிகளையே அசர வைத்து விட்டது.
நாம் பல முறை குறிப்பிட்டுள்ளோம்,
பிஜேபிக்கும் பிஜே பார்ட்டிக்கும் வேற்றுமையை விட ஒற்றுமைகளே அதிகம்.
பிஜேபியின் அத்வானி மீது பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது. தான் வகித்து வந்த உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து அத்வானி ராஜினாமா செய்தார். பொதுவாழ்வில் தூய்மையை நிரூபிப்பதற்காக பதவியை துறந்தவர் என புகழாரம் சூட்டப்பட்டது. ஆனால் குறுகிய காலத்திற்குள்ளாகவே மீண்டும் பதவியேற்றுக் கொண்டதோடு துணைப் பிரதமராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். குற்றச்சாட்டிலிருந்து எப்படி ஞானஸ்நானம் பெற்றாரோ எவரும் அறியார்.
இதைப்போலவே,
பிஜேயின் பினாமி பாக்கர் சமீபத்தில் தறுதலை ஜமாஅத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார். காரணம்,
கையும் கன்னியின் மெய்யுமாக பேருந்து நிலையத்தில் மாட்டிக் கொண்டதால், தான் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒன்றாக பயணம் மேற்கொள்ள வேண்டி வந்தது என ஜால்சாப்பு சொல்லிப் பார்த்தும் முடியாமல், முடிவில் விஷயம் சந்தி சிரித்த காரணத்தால் ராஜினாமா செய்தார். பிஜேயின் பரம ரசிகர்கள், ஆஹா பார்த்தீர்களா! எங்களுக்கு கொள்கை தான் முக்கியம், சந்தேகம் என்று வந்து விட்டால் எவ்வளவு பெரிய பொறுப்பிலிருந்தாலும் நாங்கள் தூக்கியெறிந்து விடுவோம். அவருடைய கடந்த கால பங்களிப்பு பற்றி பேசி சப்பை கட்டு கட்ட மாட்டோம். காரணம் நாங்கள் வடிகட்டிய தவ்ஹீதுவாதிகள் என பேசித் திரிந்தனர்.
இவர்கள் வடிகட்டிய தவ்ஹீத்வாதிகளல்லர். மாறாக வடிகட்டிய முட்டாள்கள் என 2004 முதலே சில விஷயமறிந்தவர்கள் கூறி வந்தனர்.
அது உண்மைதான் என இப்பொழுது ததஜவினர் நிரூபித்துள்ளனர்.
ஏனெனில், பாக்கரின் ராஜினாமா விஷயத்தில் ததஜவின் சாதாரண தொண்டனை விட அதிகமதிகமாக அந்த சம்பவத்திற்கு தஃப்ஸீரும், தஃவீலும் செய்தவர் கிரிமினல் தலைவன் பிஜே தான்.
பாக்கரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, தனது தொண்டரடிப் தொண்டரடிப் பொடியினருக்கு தனது வலைத்தளத்தின் மூலமாக வஞ்சகத்தனத்தை வலைவிரித்தவர் தான் இந்த பிஜே.
பாக்கர் அந்த பேருந்தில் எப்படி அமர்ந்திருந்திருப்பார். பேருந்து ஓட்டத்தில், அருகருகில் அமர்ந்திருப்பவர் இருளின் துணையோடு என்னென்ன செயல்களிளெல்லாம் ஈடுபட்டிருப்பார் என விஸ்தாரமாக தனது கற்பனை ஓட்டத்தில் கதையளந்தவர் கிரிமினல் தலைவன் பிஜே தான்.
தனது நவீன குரு (பீர்) பிஜேவிடம் முரீது பெற்ற முட்டாள் சீடர்கள், உடனே கொள்கை குன்றுகள் போல் வீரவசனம் பேசித் திரிந்தனர். இயக்கத்தின் கொள்கைகளுக்காக, குற்றம் சுமத்தப்பட்டவரை துரத்தி அடித்ததாகவும், அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், பதவி இறக்கம் செய்ய தயங்க மாட்டோம் என முழங்கி வந்தனர்.
இவர்கள் அத்தனை பேர் மூஞ்சியிலும் டன் கணக்கில் கரியை அள்ளி பூசிவிட்டனர் கிரிமினல் தலைவன் பிஜேயும் அவரது பினாமி (டு)பாக்கரும்.
இவர்களுக்கு கொள்கையும் கிடையாது ஒரு குப்பையும் கிடையாது என்பதனை இதன் மூலமாக அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காட்டி விட்டனர்.
கொள்கை என்று ஒன்று இருந்திருந்தால் 2004 ல் ஒய்.கே.மேன்சன் விவகாரத்திலேயே (டு)பாக்கரை தூக்கி எறிந்திருப்பர்.
என்ன செய்வது. அப்பொழுது தான் தமுமுகவிலிருந்து சுருட்டிக் கொண்டு வந்த சொத்துக்களுடன் தனிக்குடித்தனம் ஆரம்பித்துள்ள நிலையில், அப்பொழுது பிஜே தலைவராக கூட ஆகாத நிலையில், (டு)பாக்கர் மீது கைவைத்தால் தனது எதிர்காலம் அப்பொழுதே அஸ்தமித்து விடும் என கிரிமினல் தலைவன் பிஜேவுக்கு தெரியும். எனவே தான் ஒய்.கே.மேன்சனுக்கு வக்காலத்து வாங்கினார்.
அதனை அப்பொழுதே நாம் சுட்டிக்காட்டினோம்.
ஆனால் அறிவோடு சிந்தித்து விளங்கிக் கொண்டவர்கள் குறைவு.
இத்தகையோரின் மடமைத்தனத்தையே தனது மூலதனமாகக் கொண்ட கிரிமினல் பிஜே, ஒய்.கே.மேன்சன் விவகாரத்தை சப்பைக்கட்டு கட்டி பேசியதை நினைவு படுத்திப் பாருங்கள்.
‘தப்பு செய்றவன் இப்புடி எல்லாருக்கும் தெரியுற மாதிரியா செய்வான். யாருக்கும் தெரியாம எங்காவது தூரமா ஒதுக்குப்புறமா போய்தானே செய்வான்’ என்று தர்க்கம் புரிந்தார்.
நவீன முரீதுகளாகிய ததஜவினர் தலை ஆட்டி ஆமோதித்தனர்.
ஒருவேளை தலைவர் குறிப்பிட்ட தப்பு செய்வதற்கான இலக்கணத்தை புரிந்து கொண்டனர் போலும்.
ஆனால், அன்று ஒய்.கே.மேன்சனை காபந்து செய்த கிரிமினல் பிஜே இன்று கோவில்பட்டி பேருந்து விவகாரத்தில் வெளியிட்ட ஆடியோவில் பேசியிருப்பதைப் பாருங்கள்.
‘பெண்கள் விஷயத்தைப் பொறுத்தவரை, தப்பு நடக்காவிட்டாலும், நடந்திருக்குமோ என்ற சந்தேகம் வரக்கூடிய சூழல் இருந்தாலும் உடனே பதவி விலக வேண்டும். இது எங்களுக்கு நாங்களே விதித்துக் கொண்ட கட்டுப்பாடு’
இந்த கட்டுப்பாடு எப்பொழுது யாரால் விதிக்கப்பட்டது. இது குறித்து அறிவிப்பு எப்பொழுது வெளியானது. ஒரு ததஜ அடிவருடிக்கும் தெரியாது.
இதோடு விடவில்லை. மாட்டிக் கொள்ளாமல் தப்பு செய்வது எப்படி என்றும் விளக்கமளிக்கிறார். அதனை மீண்டும் எடுத்து எழுதி அனைவரையும் தப்பு செய்யுமாறு துண்டுவதற்கு நாம் தயாரில்லை.
ஆனால், இதனைத் தொடர்ந்து அவர் பேசியுள்ளது தான் ஹைலைட்.
கிரிமினல் பிஜேயின் கோவில்பட்டி பேருந்து தஃப்ஸீரைப் பாருங்கள்.
‘ஒண்ணா பயணம் செஞ்சது அறிவில்லாத செயல். பக்கத்து பக்கத்து ஸீட்ல இருந்திருக்கீங்க. இரவு நேர பயணம். நீங்க அங்கிட்டும், அவுங்க இங்கிட்டும் சாஞ்சிருப்பீங்க.. .. ..’
இப்படியாக அவரது வர்ணணை செல்கிறது. இங்கே கிளிக் செய்து அந்த வர்ணனையை செவிமடுங்கள்.
சகோதரர்களே! சற்று சிந்தித்துப் பாருங்கள். 2004 க்கும் 2007 க்கும் உள்ள வித்தியாசத்தை.
2004இல் பலர் சாட்சியாக நடைபெற்ற ஒன்றை மூடி மறைக்க முயற்சி எடுத்தவர், 2007இல் பேருந்திற்கு உள்ளே பக்கத்தில் இருந்து கண்டது போல் விபரமாக, விரசமாக விளக்கம் அளித்தது ஏன்?
அதுதான் கிரிமினல் பிஜேயின் கிரிமினல் திட்டம்.
2004இல் கொள்கை, கத்தரிக்காய் என கூவி இருந்தால், துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு (டு)பாக்கர் கிளம்பியிருப்பார். பிஜே பாயை பிராண்டியிருப்பார்.
மகனுக்கென மூன் மீடியாவை உருவாக்கியிருக்க முடியாது.
தேவநாதனின் வின்டிவியை வளைத்திருக்க முடியாது.
தோட்டத்து பணப்பயிரை அறுவடை செய்திருக்க முடியாது.
இப்படி எத்தனையோ காரணங்கள்.
ஆனால் இன்றோ, மேற்கூறியவற்றையும் அதற்கும் மேலாகவும் கண்டாகி விட்டது.
கைகழுவினால் கூடுதல் இலாபம் பெறலாம் என கிரிமினல் முளை வேலை செய்ததால் நாடகத்தை நடத்த திட்டமிட்டார்.
சாதாரண ஜெயினுலாபிதீனை தனது வியாபாரத்திற்காக பிஜே என பிரம்மாண்டப்படுத்தி பிரபலப்படுத்திய வியாபாரிக்குத்தானே அந்த பிராண்டை எப்படி ஒழக்க முடியும் எனத்தெரியும். பிஜே எனும் பிராண்டை ஒழிக்க வியாபாரி (டு)பாக்கர் என்ன செய்தாரோ தெரியவில்லை. பாக்கர் இப்பொழுது ஞானஸ்நானம் பெற்றுவிட்டார்.
ஆகவே,
மான்ய மகா ஜனங்களே!
பாலியல் தவறு செய்வது எப்படி என கற்றுக் கொடுக்கவும், தவறு செய்தவர்களை தட்டிக் கொடுத்து பதவியில் அமர்த்தவும், தமிழ்நாடு தறுதலை ஜமாஅத் என்றும் தயாராக இருக்கிறது என்ற நல்ல செய்தியை ததஜவின் கிரிமினல் தலைவன் பிஜேவின் சமீப கால நடவடிக்கை ஊர்ஜிதப்படுத்துகிறது.
தவிப்போடு ததஜவில் தொடரும் உண்மை தவ்ஹீத்வாதிகளுக்கு விடுதலை வேட்கையை அதிகப்படுத்தும் இந்த நிகழ்ச்சிக்குப் பின்னும் அடிமையாய் இருக்கப் போகிறார்களா? விடுதலை கோஷம் எழுப்பி வெளியேறப் பேகிறார்களா?




